Wednesday 14 May 2014

நா முத்துக்குமார் அவர்கள்,விகடன் நேர்காணலில்.. '''ஆனந்த யாழை...’ பாட்டுக்கான ம...

நா முத்துக்குமார் அவர்கள்,விகடன் நேர்காணலில்..



'''ஆனந்த யாழை...’ பாட்டுக்கான முதல் அங்கீகாரத்தைத் தொடங்கி வெச்சதே, 'ஆனந்த விகடன்’தான். விகடன் விருதைத் தொடர்ந்து நார்வே இன்டர்நேஷனல் ஃபெஸ்டிவலில் சிறந்த பாடலாகத் தேர்வு, பிறகு தேசிய விருது'' - மெல்லியச் சந்தோஷத்தோடு பேசுகிறார் நா.முத்துக்குமார்.



''விருது செய்தி வந்த 10-வது நிமிடத்தில் யுவனிடம் இருந்து வாழ்த்துச் செய்தி. 'உங்களால்தான் இந்த விருது’னு நன்றி சொன்னேன். 'உங்கள் வரிகளுக்குக் கிடைத்த விருது’ என்றார். 'உடலையும் உயிரையும் தனியாப் பிரிக்க முடியாதே. உங்களுக்கும் கிடைச்சிருக்கணும். அடுத்தமுறை 'தரமணி’க்காகச் சேர்ந்து வாங்குவோம்’ என்றேன். சந்தோஷப்பட்டார்.